சென்னை: இதுவரை இல்லாத வகையில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டிய நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரைச் சேர்ந்த பகதூர் சிங் பரிஹார் என்பவர் ஒரு டிரக்கர்ஸ் யூனியனின் தலைவராக உள்ளார். இவர் ஹெல்மெட்டுடன் கார் ஓட்டிச் செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது ஏன் என்று பார்க்கையில், இவர் ஹெல்மெட் அணியாமல் ஆடி காரை ஓட்டியதால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது தெரிய வந்தது.
ஆனால் அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டவில்லை என்றும், தனது ஆடி காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பின் ஏன் இந்த அபராதம் என்று பார்க்கும்பொழுது, பகதூர் சிங்கிற்கு வந்த குறுஞ்செய்தியின் படி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றபோது பிடிபட்டதாகவும், ஆனால் அவர் தனது காரை ஓட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆம், சலானில் உள்ள புகைப்படம் இருசக்கர வாகனமாக இருந்தாலும், வாகனத்தின் கேட்டகிரியில் ‘மோட்டார் கார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தவறாக அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக, அந்த நபர் போக்குவரத்து போலீசாரை அணுகி, தவறு குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, மக்களவைத் தேர்தல் முடியும் வரை காத்திருக்குமாறு கூறப்பட்டது.
இதனால், அவர் மீண்டும் ஒரு அபராதம் விதித்தால் என்ன செய்வது என்று அபராதத்தை தவிர்க்க ஹெல்மெட் அணிந்து கொண்டு கார் ஒட்டுகிறாராம்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…