மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் 1.44 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ மாட்டிறைச்சியை வேனில் வைத்து கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சட்டவிரோதமாக 1.44 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய இந்த நபர் தனது வேனில் வைத்து மாட்டு இறைச்சியை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வேனை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் இருந்த ஆயிரத்து 200 கிலோ மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மேலும், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து பிவாண்டி தாலுகா காவல் நிலைய போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தடையை மீறுபவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…