உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நபர் ஒருவர் தனது மனைவி உடலுறவு கொள்ள வர மறுத்ததால் மனைவியை சுட்டு கொன்று விட்டு, அவரது மூன்று குழந்தைகளையும் கால்வாயில் தூக்கி எறிந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாசண்டி கிராமத்தில் வசித்து வரக்கூடிய பப்பு குமார் என்பவரது மனைவி தான் டோலி. இவர்களுக்கு ஐந்து வயதில் சோனியா எனும் குழந்தையும், மூன்று வயதில் வான்ஸ் எனும் குழந்தையும், ஒன்றரை வயதில் ஹர்ஷிதா எனும் குழந்தையும் உள்ளனர். கடந்த 15 நாட்களாக குமாரின் மனைவி உடல்ரீதியாக உறவு கொள்வதற்கு பப்பு குமாரிடம் இணங்கி செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து கோபம் அடைந்த குமார் தனது மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார்.
மேலும், தனது மூன்று குழந்தைகளையும் தூக்கி கால்வாயில் வீசி எறிந்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரித்ததில் தனது மனைவியை கொன்றதையும் தனது குழந்தைகளை கால்வாயில் வீசியதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் கால்வாயில் இருந்து இதுவரை எந்த ஒரு சடலங்களும் மீட்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…