துபாய்-அமிர்தசரஸ் விமானத்தில் குடிபோதையில் விமானப் பணிப்பெண்ணிடம் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துபாயிலிருந்து அமிர்தசரஸ் செல்லும் விமானத்தில் குடிபோதையில் பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் கோட்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற நபர் விமானத்தில் குடிபோதையில் பயணம் செய்துள்ளார்.
இதனையடுத்து, ராஜிந்தர் சிங் விமானத்தில் உள்ள பணிப்பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை விமானப் பணிப்பெண் குழுவினரிடம் தெரிவித்த நிலையில், விமான ஊழியர்கள் அமிர்தசரஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பிறகு விமான நிறுவனத்தின் உதவி பாதுகாப்பு மேலாளர் போலீசில் புகார் அளித்தார். பின்னர், விமானம் ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீசார் ராஜிந்தர் சிங்கை கைது செய்துள்ளனர். ராஜிந்தர் சிங் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…