பக்தியார்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த பீகார் முதல்வரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள பக்தியார்பூர் எனும் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவரை சுற்றி பாதுகாப்புக்காக காவலர்களும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நிதிஷ்குமார் மேடையில் ஏறி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளார். மலர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மேடையில் ஏறி சென்று முதல்வர் நிதிஷ்குமார் தோளில் குத்தியுள்ளார்.
இதை கண்டதும் உடனடியாக காவலர்கள் முதல்வரை சூழ்ந்து கொண்டதுடன், அந்த இளைஞனையும் கைது செய்துள்ளனர். விசாரணை செய்ததில் அந்த நபர் உள்ளூரை சேர்ந்த சங்கர் வர்மா என்பதும், அவர் நகை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
பல்வேறு அரசியல்வாதிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள பீகார் மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி அவர்கள், முதல்வரின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களில் ஒரு பகுதியினர் தவறு இழைத்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…