கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்திய மம்தா…!

Default Image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார். 

பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து  உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த பாடகர் கேகேவுக்கு மேற்கு வங்க முதல்வர் அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர சதனில் வைக்கப்பட்டுள்ள கே.கே- வின் உடலுக்கு அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கேகே உடலுக்கு கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்