இவர்கள் ஒன்றிணைந்தால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம்.! மம்தா பானர்ஜியின் ராஜ தந்திரம்.!

Published by
மணிகண்டன்

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டிவிடலாம். 

மேற்கு வங்கத்தில் விரைவில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தை தற்போது ஆரம்பித்துள்ளார் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசினார்.

அப்போது, ‘மேற்கு வங்க மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை பெருகுவதிலேயே தமது அரசின் முழு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை பிடித்ததாக பாஜக பெருமையோடு கூறி வருகிறது. கடந்த 1989ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைவதற்கு முன்பு வரை ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியானது 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

வருகின்ற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டால் அது மாபெரும் சக்தியாக மாறும். அதன்மூலம் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டிவிட முடியும்.’ என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தா கூட்டத்தில் தெரிவித்தார்.

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

30 seconds ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

5 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

11 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

33 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

49 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago