யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி நேற்று நடத்திய ஆய்வுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்து,பிரதமர் மோடியை,அவமதித்து விட்டார் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் மட்டுமே வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக வந்துள்ளார். மம்தா பானர்ஜி வந்தவுடன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை ஒன்றை வழங்கிவிட்டு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர்கள்,பா.ஜ.க உறுப்பினர்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து அதிரடியாக மேற்கு வங்க தலைமை செயலாளர் அலபன் பண்டா பாத்யாயா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,யாஸ் புயல் குறித்து பிரதமர் மோடி நேற்று நடத்திய ஆய்வுக்கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததற்காக,மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் கூறுகையில்,”புயல்பாதிப்பை மதிப்பிட வந்த பிரதமர் மோடியை,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவமதித்து விட்டார்.பிரதமர் மோடியை ஒட்டுமொத்த நாடே பின்பற்றுகிறது .ஆனால்,அவரை மம்தா பானர்ஜி அவமதித்துள்ளார்.இதனால்,முதல்வர் மம்தா,தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் நலனில் அக்கறை இல்லாதவராக தெரிகிறார்.
நானும் ஒரு முதலமைச்சர்தான்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜியின் காலத்தில் கூட முதல்வர் பதவியில் இருந்தேன்.ஆனால் நான் அவரை ஒருபோதும் அவமதிக்கவில்லை”,என்று கூறினார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…