மேற்கு வங்கத்தில் தினசரி கொரோனா தொற்று சுமார் 12,000 கடந்து அதிகரித்து வருகிறது .அத்தகைய சூழ்நிலையில், திரிணாமுல் தலைவரான மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி “நாடு முழுவதும் கோவிட்டில் அதிகரித்து வரும் நிலைமையைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றி, எனது முன் திட்டமிடப்பட்ட பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்” மீண்டும் கூட்டங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை விரைவில் பகிர்ந்துகொள்வோம்” என்று முதல்வர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
சில மணி நேரங்களுக்கு முன்னர், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஏப்ரல் 22 (வியாழக்கிழமை) இரவு 7 மணி பேரணிகள் அதிகமாக மக்கள் கூடும் பிரச்சாரங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது, மேலும் இதுபோன்ற பேரணிகள் மற்றும் பிரச்சாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்து என்று தெரிவித்தது .
இருப்பினும், 500 க்கும் குறைவான நபர்களைக் கொண்ட பொதுக் கூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அனைத்து கடுமையான கொரோனா பாதுகாப்பு மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளுடன் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் தான் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடி ரத்து செய்தார். கொரோனா தடுப்பு தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுவதால் மேற்கு வங்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…