மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3 வது முறையாக இன்று முதல்வர் பதவியேற்றுள்ளார்
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடி வெற்றி பெற்றது.இதனால்,மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்த பதவியேற்பு விழாவானது மிக எளிய முறையில் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க,மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டச்சார்ஜி,எதிர்க்கட்சி தலைவரான அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பீமன் போஸ்,திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி,தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ஆகிய குறைந்த பட்ச நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,இன்று காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகிய இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஜகதீப் தங்கர் முன்னிலையில்,மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றார்.இதனால், தொடர்ந்து 3 வது முறையாக மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்று மம்தா பானர்ஜி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…