புதிய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே.? வெற்றி வாய்ப்பு பிரகாசம்.!

Default Image

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிற நிலவரம் வெளியாகியுள்ளது.  

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தற்போது 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சுமார் 7000 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதனால் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இன்னும் சில மணி நேரங்களில் முடிவு அதிகாரபூர்வமாக தெரிய வரும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்