பாஜக மக்களை தவறாக வழிநடத்துகிறது.! கார்கே கடும் குற்றசாட்டு.!

Published by
கெளதம்

புது டெல்லி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, மதம் மற்றும் பிரிவினைவாத விவகாரங்களில் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 15 நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலையுயர்வை பற்றிப் பேசவில்லை, ஆனால் “மோடி” 758 முறை, “காங்கிரஸ்” 232 முறை, “இந்தியா கூட்டணி” 573 முறை குறிப்பிடப்பட்டதாக அவர் கூறினார். இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “மக்களவை தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் பிரிவினைவாத பேச்சுக்களைப் பொருட்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் 421 முறை மந்திர்-மசூதி பற்றியும், 224 முறை முஸ்லீம் பற்றியும், சிறுபான்மையினர் பற்றியும் பேசினார். ஆனால், தேர்தல் ஆணையம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கார்கே கூறினார்.மேலும் அவர் பேசுகையில், “மக்களவை தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்டப் பிரச்சாரம் இன்று (மே 30) மாலையுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில், ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றியுள்ளனர்.

மதம், குலம், பிரதேசம், பாலினம், மொழி போன்ற வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாக நிற்கிறார்கள்,” என்று அவர் கூறினார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் மதம் மற்றும் பிரிவினைவாத விவகாரங்களில் மக்களை தவறாக வழிநடத்த பல முயற்சிகளை எடுத்தனர். மக்கள் முக்கிய பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்தனர். 2024 ஜூன் 4 அன்று, மக்கள் ஒரு புதிய மாற்று அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது.

இந்தியா கூட்டணி முழு பெரும்பான்மையுடன் அரசை அமைக்கும், அனைவரையும் கொண்டு செல்லும் அரசை உருவாக்குவோம்,” என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி எப்போதும் அகிம்சையில் நம்பிக்கை வைத்தவர் என்றும், யாரையும் வெறுக்கவில்லை என்றும் கூறினார். ஆனால், பிரதமர் மோடியின் சொற்கள் வெறுப்பை பிரதிபலிக்கின்றன என்று அவர் கார்கே குற்றம்சாட்டினார். மன்மோகன் சிங் பிரதமராகவும், சோனியா காந்தி (யுபிஏ) தலைவராகவும் இருந்த போது, ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை கொண்டு வந்தோம் என்று கார்கே கூறினார்.

ஆனால், பிரதமர் மோடி விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டினார். “நாங்கள் வேலைவாய்ப்பின்மை, விலையுயர்வு மற்றும் பொருளாதார சமதளத்தின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடினோம், மக்களின் முழு ஆதரவைப் பெற்றோம். ஜனநாயகத்தை பாதுகாக்க துணிந்து நிற்கும் என் சகாக்களுக்கு வாழ்த்துக்கள்” என்றும் கூறினார்.

மேலும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கூற்றை மேற்கோள்காட்டி, மதத்தில் ‘பக்தி’ பரமபதம் அடைய ஒரு பாதையாக இருக்கலாம், ஆனால் அரசியலில் ‘பக்தி’ அல்லது அரசியல் வீர வழிபாடு நிச்சயமாக அழிவிற்கு வழிவகுக்கும் என்பது உறுதி என்று பேசியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

29 minutes ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

31 minutes ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

2 hours ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

2 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

2 hours ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

3 hours ago