Categories: இந்தியா

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியவர் தான் பிரதமர் மோடி… கார்கே தேர்தல் பரப்புரை!

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: மத்திய பாஜக சில மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சி அமைகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணியில் காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் பரபரப்பராக நடந்து வருகிறது. சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்தவகையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

இதன் மூலம் புதுச்சேரி மக்களை பாஜக புறக்கணிக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. ஆனால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கி மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாஜக அரசு கைக்குள் போட்டுகொண்டு தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளனர்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை துணைநிலை ஆளுநர் வைத்து தொல்லை கொடுத்தனர். இந்த மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாடு வளர்ச்சியடைந்துவிட்டதாக கூறும் பிரதமர் மோடி 100 நாள் வேலை திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை.

இந்தியா முழுவதும் பல எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியவர் தான் பிரதமர் மோடி. மத்திய பாஜக அரசு சில மாநிலங்களில் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கிறது. பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏ, எம்.பி.கள் மீதும் பொய் வழக்கு போடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆளுநர்கள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நெருக்கடியை கொடுக்கின்றது பாஜக அரசு. எனவே, இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

Recent Posts

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

1 hour ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

1 hour ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

2 hours ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

3 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

3 hours ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

4 hours ago