நான் மும்பைக்கு வருவது உறுதி , முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது.நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.சுஷாந்த் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சுஷாந்தின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்த் மரணம் தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.குறிப்பாக கரண் ஜோகர் தான் பாலிவுட் திரையுலகத்தின் மாஃபியா கும்பலின் முக்கிய குற்றவாளி என்று குற்றம்ச்சாட்டினார். அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அந்த வீடியோவில் ,மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக உணருவதாக தெரிவித்தார்.இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இவரது இந்த கருத்துக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , கங்கனாவின் இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.மேலும் பயமாக இருந்தால் மும்பை மாநகரத்துக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் கங்கனா ரனாவத் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ,நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் பயமுறுத்தி வருகின்றனர்.வருகின்ற 9-ஆம் தேதி மும்பைக்கு வருவதாகவும், முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…