சரணம் ஐயப்பா.! மகர ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சபரிமலை ஐயப்பன்.!

Sabarimalai Ayyappan Temple - Makara Jyothi Dharisan

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்த்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.   கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர்,  டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஜாக்கிரதை : அயோத்தி ராமர் கோயில் சிறப்பு அழைப்பிதழ்.! இணையவழி மோசடிகள்…

பொன்னம்பல மேட்டில் சரியாக 6.40 மணியளவில் சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளித்த மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 3 முறை மகர ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு கண்கொள்ளா கட்சியாக அமைந்தது. பக்தர்கள், சுவாமியே சரணம் ஐய்யப்பா எனும் சரண கோஷங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கோஷமிட்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில், சன்னிதானத்தின் திருமுற்றம், பாண்டித்தாவளம், கொப்பரைக்களம், மாளிகைபுரம், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம், பமபை உள்ளிட்ட 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.

இன்று பந்தள அரச குடும்பத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆடை அணிகலன்களுடன் ராஜ அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் காட்சியளித்தார். ஜனவரி 20 வரையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். ஜனவரி 21இல் பந்தள அரச குடும்பத்தின் தரிசனத்திற்கு பிறகு சபரிமலை சன்னிதானம் நடை சாத்தப்படும். பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரியில் நடை திறக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu
Free laptop for College students
tidel park TN
Tamil Nadu Budget 2025
TN Budget 2025 for students
TNBudget2025
Department of Archaeology