திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர் காணவில்லை.? குழப்பத்தில் குடும்பத்தார்.!

Default Image

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராய் காணவில்லை என அவருடைய மகன் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய் நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை காணவில்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் தனது தந்தை முகுல் ராய் சென்றதாகவும், அவர் சென்ற அந்த விமானம் நேற்று இரவு 9.55 மணிக்கு டெல்லியை சென்றடைந்தது எனவும், ஆனால் முகுல் ராயை தொடர்பு கொள்ள முடியவில்லை என மகன் சுபர்க்ஷு ராய் கூறியுள்ளார்.

இது குறித்து, விமான நிலைய காவல்துறை அதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளதாகவும் செய்தியாளர்களை சந்தித்து முகுல் ராய் மகன் சுபர்க்ஷு ராய் தெரிவித்துள்ளார்.

மேலும், டிஎம்சி கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து ராய் கடந்த 2017-இல் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் தேசிய துணைத் தலைவர் ஆகவும் அவர் ஆக்கப்பட்டார். இருப்பினும், 2021 மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, ராய் திரிணாமுல் காங்கிரசுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்