பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு உள்ளீட்டு செலவு காரணமாக விலை உயர்வு அவசியமாக உள்ளது என மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார சிக்கல்கள் காரணமாக பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா & மஹிந்திரா தனது டிராக்டரின் விலையை அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இந்தத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜனவரி 1, 2021 முதல் டிராக்டர்களில் மாடல்களின் வகையை பொறுத்து விலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு உள்ளீட்டு செலவு காரணமாக விலை உயர்வு அவசியமாக உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. வெவ்வேறு மாடலின் விலை அதிகரிப்பு குறித்து விவரங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. செலவு அதிகரிப்பு தாக்கத்தை ஓரளவிற்கு ஈடுசெய்யும் பொருட்டு அடுத்த மாதம் முதல் மஹிந்திரா & மஹிந்திரா தனது முழு அளவிலான பயணிகள் மற்றும் வணிக வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…