மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என அழைக்கப்படக்கூடிய இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆகிய அன்பு தந்தை காந்தியடிகள் அவர்கள் மகாத்மா காந்தி என அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்ததில் முக்கிய காரணமாக இருக்கும் அவர் இந்தியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். போர்பந்தரில் அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்த இவருக்கு இன்றுடன் 151 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காந்தியடிகளின் பிறந்த நாளில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளான இன்று டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளில் தேச நலமும் முன்னேற்றமும் அடைந்திட நம்மை அர்ப்பணித்து அகிம்சை வழியை பின்பற்றுவோம் எனவும், காந்தியடிகளின் அன்பு உண்மை அகிம்சை ஆகியவை உலக நலனுக்கு வழிவகுக்கிறது எனவும், தூய்மையான திறமையான, வலுவான, வளமான இந்தியாவை நாம் உருவாக்கி காந்தியின் கனவை நனவாக்குவோம் எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…