மகாத்மா காந்தியின் சிலை கபலீகரம்.. அடித்து நொருக்கி அட்டூழியம்.. கயவர்களை கைது செய்யுமா காவல் துறை..

Default Image
  • இந்திய தேச தந்தையின் சிலையை சிதைப்பு.
  • இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பு.

இந்திய தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் சிலை தகர்க்கப்பட்டது இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அம்ரேலியில் மகாத்மா காந்தியடிகள் சிலையை சமூக விரோதிகள் தகர்த்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. அம்ரேலி மாவட்டத்தில்  ஹரி கிருஷ்ணா என்ற ஏரியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை சூரத் தொழிலதிபர் ஒருவரின் அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் உடைத்து தகர்த்து தரையில் வீசியுள்ளனர்.

Image result for mahatma gandhi statue broken in gujarat

சமூக விரோதிகளின் இந்நடவடிக்கை இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இதையடுத்து அந்தபகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள்  மூலம் காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள விரும்பாத சமூக விரோதிகள் சிலரே இந்த கொடுஞ்செயலை செய்திருக்கலாம் என்கிறார் காவல்துறை அதிகாரி ஒய்.பி. கோஹ்லி. இந்த சிலை உடைப்பு சம்பவம் இந்திய மக்களிடையே பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்