மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
மஹாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தார் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிரா மாநில முனிசிபல் கார்பரேஷன் ஊழியர்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸை அறிவித்துள்ளார்.
அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சுமார் 93,000 பேருக்கும், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் சேர்ந்து BEST இன் கிட்டத்தட்ட 29,000 ஊழியர்களுக்கும் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி), பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (பெஸ்ட்), மற்றும் சிவில் அமைப்புடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஊழியருக்கும் தீபாவளி போனஸ் ரூ.22,500 என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை அறிவித்தார்.
இது குறித்து முதல்வர் ஷிண்டே வியாழக்கிழமை கூறுகையில், ‘ கோவிட் -19 கட்டுப்பாடு காலத்தின் போது, பல சிரமங்களை எதிர்கொண்ட அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மும்பையில் கொரோனா நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதில் மருத்துவர்கள் மட்டுமல்ல, முழு மருத்துவ ஊழியர்களும் முக்கிய பங்கு வகித்தனர் என்று கூறினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…