மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா தீவிரம் அதிகமாக உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கு நீட்டிப்பா? அல்லது தளர்வா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவ வருகிறது. இதில் ஒரு சில மாநிலங்கள் பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை இதுவரை 33,050 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1074 ஆகவும் உள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட 33,050 பேரில் 8,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா தீவிரம் அதிகமாக உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9, 915 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 432 ஆகவும் இன்று காலை நிலவரப்படி அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை ஒரு பெரும் நகரமாக இருக்கின்றது. அங்கு பாதிப்பும் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மும்பையில் மட்டும் இதுவரை 6,644 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் தமிழர்கள் வாழும் தாராவி பகுதியும் அடங்கும். மும்பையைத் தொடர்ந்து புனேவில் 1,192 பேரும் தானேவில் 882 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் மரணங்களும் வேகமாக அதிகரித்து வரும் மாநிலம் குஜராத். இங்கு 4082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

14 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

15 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

16 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

16 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

17 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

19 hours ago