மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஒருமாதம் ஆகியும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாததால் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
பதவி பகிர்வில் ஏற்பட்ட சிக்கலால் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி வருகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதை தொடர்ந்து சிவசேனாவுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க சோனியா காந்தி ஒப்புக்கொண்டதாக என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சரத் பவாரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் “காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே நீண்ட நேரம் விவாதங்கள் நடந்தன. ஆலோசனை தொடர்ந்து நடைபெறும். மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை விரைவில் எங்களால் கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன்”என கூறினார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…