மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஒருமாதம் ஆகியும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாததால் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
பதவி பகிர்வில் ஏற்பட்ட சிக்கலால் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி வருகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதை தொடர்ந்து சிவசேனாவுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க சோனியா காந்தி ஒப்புக்கொண்டதாக என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சரத் பவாரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் “காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே நீண்ட நேரம் விவாதங்கள் நடந்தன. ஆலோசனை தொடர்ந்து நடைபெறும். மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை விரைவில் எங்களால் கொடுக்க முடியும் என நான் நம்புகிறேன்”என கூறினார்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…