கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இடம் பெற்றுள்ளதுடன், மகாராஷ்டிரா தான் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்து வந்தாலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் புதிய பதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதும் மத்திய அரசு கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 26,37,735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,00,056 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 53,907 பேர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக கேரளா தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மூன்றாவதாக கர்நாடகா, அடுத்த படியாக ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா என வரிசைப்படி அட்டவணை படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில உள்ளது. தமிழகத்தில் இதுவரை 8,75,190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,51,222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் தமிழகம் முழுவதிலும் இதுவரை 12,650 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…