மகாராஷ்டிரா: மழை விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

Published by
பாலா கலியமூர்த்தி

மகாராஷ்டிராவில் பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அங்கு மழையால் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக இதுவரை வெவ்வேறு இடங்களில் 164 பேர் உயிரிழந்த நிலையில், 56 பேர் காயமடைந்தனர், 100 பேர் இன்னும் காணவில்லை என்று அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய பேரிடர் குழு தொடர்ந்து வீடு இடிபாடுகளில் சிக்கியவர்களை, நிலச்சரிவில் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரம் காணாமல் போன நபர்களையும் தேடி வருகிறது.

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி வெள்ளத்தால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப்படையினரால் இதுவரை 1.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

36 minutes ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

1 hour ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

2 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

3 hours ago

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

3 hours ago