தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ்,தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றது.
குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்த அஜித் பவார் பாஜகவுடன் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜகவிற்கு ஆதரவு அளித்த அஜித் பவரை சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளார்.அவர் சரத்பவார் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் பாஜக ஆட்சியமைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், திடீர் சந்திப்பால் சிவசேனா, காங்கிரஸ் கலக்கத்தில் உள்ளது .
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…