மகாராஷ்டிரா: ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த MPSC- தேர்வுகள் ஒத்திவைப்பு…!

Published by
Edison

மகாராஷ்டிராவில், ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருந்த 2021-ம் ஆண்டிற்க்கான ‘மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(MPSC) தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள “மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (MPSC)” தேர்வுகள் தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தக்காரேயுடன்,MPSC தேர்வாணைய நிர்வாகம் ஒரு கூட்டம் நடத்தியது, அதைத் தொடர்ந்து MPSC தேர்வுகளை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.

COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மகாராஷ்டிரா அரசு பணியாளர் தேர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேர்வின் தேதியை சில நாட்களுக்கு தள்ளிவைக்குமாறு மாணவர்கள் இதற்கு முன்பு கேட்டுக்கொண்டதனால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக MPSC நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021 ஏப்ரல் 23 முதல் மே இறுதி வரை கால அட்டவணையின்படி நடைபெறும் என்றும், மேலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படமாட்டாது,என்றும் மகாராஷ்டிரா கல்வித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், அதிகரித்து வரும் கொரோனாவால் மாநிலத்தின் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Edison

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago