மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 920 பேர் புதிதாக கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது தவிர குறைந்தபாடில்லை. தினமும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 920 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். எனவே இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 72,662 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 57,640 ஏர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 57,006 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3,282 கொரோனா தொற்று பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…