Categories: இந்தியா

Ajit Pawar : வங்கி மோசடி வழக்கு..! மகாராஷ்டிரா துணை முதல்வர் பெயர் சேர்க்கப்படவில்லை.!

Published by
மணிகண்டன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் விசாரணையில் முதல் குற்றப்பத்திரிக்கை முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது மனைவிக்கு தொடர்புடைய நிறுவனம் ஒன்று குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கூடுதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

கூடுதல் குற்றப்பத்திரிகையில், அஜித் பவார் பெயர் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் இதில் சேர்க்கப்படவில்லை.  ஆனால், அந்த குற்றப்பத்திரிகையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரஜக்த் தன்பூரே, அவரது தந்தை மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரசாத் தன்பூரே, முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரஞ்சீத் தேஷ்முக், சுபாஷ் தேஷ்முக் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் தான் சரத் பவாரிடம் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலபேருடன் அஜித் பவார் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் பதவி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்து. அதற்கு முன்னதாக சரத் பவாருடன் இணைந்து,  காங்கிரஸ் கூட்டணியில் அஜித் பவார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

2 hours ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

4 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

4 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

6 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

6 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

7 hours ago