மகாராஷ்டிரா :சிறைகளில் உள்ள 1,043 கைதிகள், 302 சிறை ஊழியர்களுக்கு கொரோனா.!

Published by
Ragi

மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளில் இதுவரை 1,043 கைதிகளும், 302 சிறை ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளிடையே கொரோனா பரவலை தடுக்கவும், நெருக்கத்தை குறைக்கவும் உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகளின்படி 10,480 கைதிகளில் 2,444பேர் பரோலிலும், மீதமுள்ளவர்கள் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளிலுள்ள கைதிகளில் 1,043 பேரும், சிறை ஊழியர்களில் 302 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சிறைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 சிறை கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து 818 கைதிகள் மற்றும் 271 சிறை ஊழியர்கள் மீண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் திங்களன்று மட்டும் புதிதாக 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,04,358 ஆக உயர்ந்துள்ளது.

Recent Posts

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசர் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசர் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

22 minutes ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

55 minutes ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

1 hour ago

CSK மீதான விமர்சனம்.., “இனி அப்படி நடக்காது” விளக்கம் கொடுத்த அஸ்வின் யூடியூப் சேனல்!

சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…

2 hours ago

அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

3 hours ago

தமிழ்நாடு பாஜக ‘புதிய’ தலைவர் யார்? பிரதமர் அருகில் கடைசி நேர இருக்கை ஒதுக்கீடு?

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…

3 hours ago