மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளில் இதுவரை 1,043 கைதிகளும், 302 சிறை ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளிடையே கொரோனா பரவலை தடுக்கவும், நெருக்கத்தை குறைக்கவும் உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகளின்படி 10,480 கைதிகளில் 2,444பேர் பரோலிலும், மீதமுள்ளவர்கள் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளிலுள்ள கைதிகளில் 1,043 பேரும், சிறை ஊழியர்களில் 302 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சிறைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 சிறை கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து 818 கைதிகள் மற்றும் 271 சிறை ஊழியர்கள் மீண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் திங்களன்று மட்டும் புதிதாக 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,04,358 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…