மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளில் இதுவரை 1,043 கைதிகளும், 302 சிறை ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளிடையே கொரோனா பரவலை தடுக்கவும், நெருக்கத்தை குறைக்கவும் உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகளின்படி 10,480 கைதிகளில் 2,444பேர் பரோலிலும், மீதமுள்ளவர்கள் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளிலுள்ள கைதிகளில் 1,043 பேரும், சிறை ஊழியர்களில் 302 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சிறைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 சிறை கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து 818 கைதிகள் மற்றும் 271 சிறை ஊழியர்கள் மீண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் திங்களன்று மட்டும் புதிதாக 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,04,358 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…