மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சட்டமேலவை உறுப்பினர் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
மகாராஷ்ட்ராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தநிலையில், சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பை ஏற்றார்.
அரசியல் சட்டப்படி சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாத ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் இரு அவைகளில் ஏதாவது ஒன்றின் உறுப்பினராக பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் முதலமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விடுவார்.
வரும் மே மாதம் 27-ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 6 மாதங்கள் முடியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் இடங்களுக்கு கடந்த 24-ம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனாவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, வரும் 21-ம் தேதி சட்டமேலவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டமேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…