கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு இடங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் புதிதாக 3660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கடந்த ஒரு வாரமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மகாராஷ்ட்ராவில் உள்ள சில மாவட்டங்களில் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதற்கு காரணம் விதிமுறைகள் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளதும், மக்கள் போடப்பட்டுள்ள சில தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் இருப்பதும் தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக கமிஷனர்கள மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் கலெக்டரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு சில அறிவுரைகளையும் கூறியுள்ளார். அதில், மக்கள் நலன் கருதி படிப்படியாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், போடப்பட்டுள்ள சில விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் மக்கள் அதிகம் அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது எனவும் கூறியுள்ள அவர், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க போகிறீர்களா? அல்லது மீண்டும் முழு ஊரடங்கு சந்திக்க போகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் அல்லது மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய நிலைமை வரும் என எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…