தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்துள்ள மத்தியப்பிரதேசம்..!

Default Image

தடுப்பூசி செலுத்துவதில் மத்தியப்பிரதேச மாநிலம் ஒரே நாளில் 24.20 லட்சம் தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது. 

கொரோனா தொற்று உலக நாடுகளை பெருமளவு பாதித்து வருகிறது. இதிலிருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த புதன் கிழமையன்று தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,  கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி 17.62 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதுவே இதுவரை தடுப்பூசி செலுத்தியதில் சாதனையாக இருந்து வந்துள்ளது. தற்போது கடந்த புதன் கிழமை மாநிலத்தில் 24.20 லட்சம் தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்