மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டது.பு 16 எம்எல்ஏக்கள் பெங்களூரில் ரிசார்ட்டில் தங்கிய நிலையில் முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக அமைச்சரவை கலைத்துவிட்டார். 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகிய சம்பவம் மத்தியபிரதேச அரசியலில் அதிரடி திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் தன் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியதை அடுத்து இந்த அதிரடி கலைப்பு நிகழ்ந்துள்ளது.மத்திய பிரதேச அரசியலில் கடந்த வாரம் முதலே அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களை பாஜகவினர் கடத்தி வைத்து அடுக்கடுக்காக புகார் வைத்தது காங்கிரஸ்.இவர்களை வைத்து எங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் திட்டமிடுகிறார்கள் என்று பகீரங்கமாக காங்கிரஸ் கூறி வந்த நிலையில் தற்போது அங்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மத்திய பிரதேசத்திலும் ரிசார்ட் அரசியல் மீண்டும் சூடுபிடித்தது. டெல்லி அருகே குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் இவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அதில் 8 எம்எல்ஏக்கள் திரும்பி வந்து விட்டதாகவும் இன்னும்2 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் டெல்லியில் தான் உள்ளதாகவும். இவர்களை காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லையாம் இந்த 2பேரும்ள் பாஜக உடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் 6 எம்எல்ஏக்கள் அதிரடியாக பெங்களூரில் ரிசார்ட் ஒன்றில் தங்கிய நிலையில் கடும் நெடுக்கடி கமல்நாத்திற்கு ஏற்படவே அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இந்த கலைப்பு முன் முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தார் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அமைச்சரவை கலைப்பு குறித்த அதிரடி முடிவு எடுத்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகி உள்ளனர். மாயமான அல்லது மாயமாக்கப்பட்ட 16 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கி அவர்களை சமாதானம் செய்கின்ற வகையில் கமல்நாத் இறங்கி உள்ளதாகவும் இது குறித்து அவர் நேற்று மாலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…