முதலில் தேர்தல்..பின்னர் வாக்கெடுப்பு..!உச்சநீதிமன்றத்தில் காங்., பிடிவாதம்!

Published by
kavitha

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் எனவே சட்டப்பேரவை கூட்டி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும் அதிகாரமானது ஆளுநருக்கு இல்லை இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கே இது குறித்து முழு அதிகாரம் உள்ளதாக தனது வாதத்தை முன்வைத்தார். . 

மேலும் அவர் ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அனைவரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் அவர்களின் ராஜினாமாவை ஏற்கும் முன் உரிய விசாரணையை அவர்களிடம்  நடத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.மேலும் மத்தியப் பிரதேசத்தில் தற்போது காலியாக உள்ள சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தலை நடத்தி முடித்த பிறகு தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தள்ள பாஜக  பெரும்பான்மையை  இழந்துவிட்டதால் கமல்நாத் அரசு ஒருநாள் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இது குறித்து விசாரணையை நடத்தி வருகிறது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய பிரதேசத்தில் கடும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago