மத்திய பிரதேச மாநிலத்தில், தனது மகள் திருமணம் நடைபெற இருந்த நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி திருமணத்தையே நிறுத்திவிட்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு இளம் ஜோடி திருமணம் செய்ய நண்பர்கள் உதவியுடன் பதிவு செய்திருந்தனர். 19 வயது இளம்பெண் கடந்த திங்களன்று தனது காதலர் மற்றும் அவர்களது நண்பர்கள் உடன் வந்திருந்தார்.
இந்த திருமணம் நடைபெற இருந்தபோது, அப்போது நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி அதிரவைத்துள்ளார். இதனை அடுத்து விசாரிக்கையில், அந்த பெண்ணிற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அப்போது கொரோனா முடிவுகள் வெளியாகவில்லை. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார் என சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் வீரேந்திர வர்மா, இந்த சம்பவத்திற்க்கு பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வேறொரு நாளில் திருமணத்தை நடத்தி கொள்ளலாம் என இளம் ஜோடிக்கு அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ என்னிடம் இருவரும் வருகையில் அவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. அவர்கள் இருவருமே 18 வயதை கடந்தவர்கள்.’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…