தனது மகளுக்கு கொரோனா எனக்கூறி அப்பெண்ணின் திருமணத்தையே நிறுத்திய தந்தை.!

Published by
மணிகண்டன்

மத்திய பிரதேச மாநிலத்தில், தனது மகள் திருமணம் நடைபெற இருந்த நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி திருமணத்தையே நிறுத்திவிட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு இளம் ஜோடி திருமணம் செய்ய நண்பர்கள் உதவியுடன் பதிவு செய்திருந்தனர். 19 வயது இளம்பெண் கடந்த திங்களன்று தனது காதலர் மற்றும் அவர்களது நண்பர்கள் உடன் வந்திருந்தார்.

இந்த திருமணம் நடைபெற இருந்தபோது, அப்போது நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி அதிரவைத்துள்ளார். இதனை அடுத்து விசாரிக்கையில், அந்த பெண்ணிற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அப்போது  கொரோனா முடிவுகள் வெளியாகவில்லை. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார் என சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் வீரேந்திர வர்மா, இந்த சம்பவத்திற்க்கு பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வேறொரு நாளில் திருமணத்தை நடத்தி கொள்ளலாம் என இளம் ஜோடிக்கு அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ என்னிடம் இருவரும் வருகையில் அவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. அவர்கள் இருவருமே 18 வயதை கடந்தவர்கள்.’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…

8 hours ago
மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

10 hours ago
விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

11 hours ago
“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

11 hours ago
விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

12 hours ago
“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

12 hours ago