தனது மகளுக்கு கொரோனா எனக்கூறி அப்பெண்ணின் திருமணத்தையே நிறுத்திய தந்தை.!

Published by
மணிகண்டன்

மத்திய பிரதேச மாநிலத்தில், தனது மகள் திருமணம் நடைபெற இருந்த நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி திருமணத்தையே நிறுத்திவிட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு இளம் ஜோடி திருமணம் செய்ய நண்பர்கள் உதவியுடன் பதிவு செய்திருந்தனர். 19 வயது இளம்பெண் கடந்த திங்களன்று தனது காதலர் மற்றும் அவர்களது நண்பர்கள் உடன் வந்திருந்தார்.

இந்த திருமணம் நடைபெற இருந்தபோது, அப்போது நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அந்த பெண்ணின் தந்தை, ‘ எனது மகளுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது.’ என கூறி அதிரவைத்துள்ளார். இதனை அடுத்து விசாரிக்கையில், அந்த பெண்ணிற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அப்போது  கொரோனா முடிவுகள் வெளியாகவில்லை. இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார் என சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் வீரேந்திர வர்மா, இந்த சம்பவத்திற்க்கு பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வேறொரு நாளில் திருமணத்தை நடத்தி கொள்ளலாம் என இளம் ஜோடிக்கு அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ என்னிடம் இருவரும் வருகையில் அவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. அவர்கள் இருவருமே 18 வயதை கடந்தவர்கள்.’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

2 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

3 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

5 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

6 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

6 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

6 hours ago