Categories: இந்தியா

அதிகாலை நடந்த சோகம்.. பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு.. 20 பேர் காயம்..!

Published by
murugan

Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் . காயமடைந்தவர்கள் ஷாபுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

READ MORE- நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு.. கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான்..!

இந்த பிக்கப் வாகனத்தில் சுமார் 45 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3 மணி முதல் 4 மணி அளவில் நடைபெற்றுள்ளது என கூறபடுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, கிராம மக்கள் அமாஹி தியோரி கிராமத்தில் இருந்து மாண்ட்லா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

READ MORE- தீ விபத்து ‘வதந்தி’.! அலறி அடித்து ஓடிய பயணிகள்… ரயில் மோதி 2 பேர் பலி.!

திரும்பும் போது, ​​ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து 20 அடிக்கு கீழே உள்ள வயலில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கலெக்டர் விகாஸ் மிஸ்ரா, எஸ்பி அகில் படேல் ஆகியோர் ஷாபுரா மருத்துவமனைக்கு வந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார் .

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

22 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago