உத்திரபிரதேசத்தில் எம்எல்.ஏ மற்றும் மகன் இளம் பாடகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள நிஷாத் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ விஜய் மிஸ்ரா என்பவரது வீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் இளம் பாடகி ஒருவரை அழைத்து கச்சேரி நடத்தி உள்ளார்கள். இந்நிலையில் பாடகி வீடு திரும்பும்போது விஜய் மிஸ்ரா அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் தற்பொழுது பாடகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அதை வெளியே சொல்லக் கூடாது, அவ்வாறு சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவரது மகனும் இந்த பாடகியை வாரணாசிக்கு அழைத்து ஹோட்டலில் வைத்து ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறிவிட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதையும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாகவும் இந்த சம்பவம் வீடியோவாக அவர்களிடம் இருந்ததால் தன்னால் வெளியே எத்தனை நாள் சொல்ல முடியவில்லை என்றும், தற்போது விஜய் மிஸ்ரா நில ஆக்கிரமிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தான் துணிந்து புகார் கொடுத்துள்ளதாகவும் பாடகி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…