lunar eclipse [Image source : space.com]
ஏப்ரல் 20 ஆம் தேதி கலப்பின சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளதால் வானத்தில் அடுத்த வானியல் நிகழ்வு (சந்திர கிரகணம்) நாளை தெரிகிறது.
மே 5-ம் தேதி நாளை புறநிழல் சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்த கிரகணத்தின் போது, வழக்கத்தைவிட நிலவு கருமையாக காணப்படும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதனை வெறும் கண்களால் காண முடியும் எனவும், இந்திய நேரப்படி இரவு 8.44 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
புறநிழல் சந்திர கிரகணம்:
முழு நிலவின் போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் போது. பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இது சந்திரனால் பிரதிபலிக்கும் சூரிய ஒளியை மறைக்கிறது. பூமியின் நிழலின் இருண்ட பகுதியான பூமியின் குடை வழியாக சந்திரன் செல்லும் பாரம்பரிய கிரகணத்திலிருந்து இது வேறுபடும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் எப்போது தெரியும்:
இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் நாளை இரவு 08:44 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் இரவு 01:01 மணிக்கு முடிவடையும். ஆனால், சந்திரன் பூமியின் பெனும்பிராவில் நுழைந்து வெளியேறுவதால் இந்த கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் முடிவை நாம் காண முடியாது என்று வானியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எந்தெந்த நாடுகளில் தெரியும்:
தெளிவான வானத்துடன் கூடிய சூழ்நிலையில் இருக்கும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும். அதன்படி, இந்த சந்திர கிரகணம் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் காணப்படும்.
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…