லக்னோ : லக்னோவின் வசீர்கஞ்ச் பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது பின்னால் வந்த பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் திடுக்கிடும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி தற்போது இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
விபத்து நடந்த பிறகு, பேருந்து ஒரு கணம் மெதுவாகச் சென்றது, ஆனால் பாதிக்கப்பட்டவரைச் சரிபார்க்க டிரைவர் நிறுத்தாமல், அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார், விபத்து வசீர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நகர முதியோர் இல்லத்திற்கு அருகில் நடந்தது தெரியவந்துள்ளது.
விபத்து நடந்ததை தொடர்ந்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல்களின்படி, லக்னோவின் பூர்வா மாயாநகர் நிரலாநகரில் வசிக்கும் ஜாஹித் ஹுசைன், புதன்கிழமை காலை, தனது மகன் (விபத்தில் உயிரிழந்தவர்) ரிஸ்வான் சில தனிப்பட்ட வேலைகளுக்காக சைக்கிளில் செல்வதாக வஜிர்கஞ்ச் காவல் நிலையத்திற்குத் அவருடைய தந்தை தகவலை தெரிவித்தார்.
தந்தை அளித்த புகாரின் பேரில் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவம் மிகவும் வருத்தமாக இருக்கிறது, அந்த பேருந்து ஓட்டுனரை கைது செய்ய வேண்டும்” என கூறி வருகிறார்கள்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…