Categories: இந்தியா

மக்களவை தேர்தல்: 3.40 லட்சம் வீரர்களை களத்தில் இறக்க தேர்தல் ஆணையம் முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குச்சாவடி அமைத்தல், வாக்கு இயந்திரம் சரிபார்த்தல், அழியா மை தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், தேசிய கட்சிகள் உட்பட மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு ஆயுதமாகி வருகின்றனர். இந்த நிலையில், மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்காக, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த 3.40 லட்சம் மத்திய ஆயுதக்காவல் படை வீரர்கள் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!

அதன்படி, வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகத்திடம் அதிகபட்சமாக சுமார் 3,400 கம்பெனிகளை சேர்ந்த (3.40 லட்சம்) மத்திய ஆயுதக் காவல் படைகளை (சிஏபிஎஃப்) கோரியுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள இந்த முன்மொழிவு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago