Categories: இந்தியா

மக்களவை தேர்தல்: ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், வரும் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒன்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த கூட்டணியில் சில கட்சிகள் வெளியேறினாலும், தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More – பதக்கம் வென்ற வீரர்களுக்கு லட்ச லட்சமாய் பரிசுத்தொகை.! மத்திய அமைச்சர் அறிவிப்பு.!

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான முகுல் வாஸ்னிக், வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, டெல்லியில் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன.

அதில், புது டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய 4 இடங்களில் ஆம் ஆத்மியும், சாந்தினி சௌக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு ஆகிய 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸுக்கு 24 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 2 இடங்களும் (பரூச் மற்றும் பாவ்நகரில்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, ஹரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 9  இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு (குருக்ஷேத்ரா) இடத்திலும் போட்டியிடுகிறது. மேலும், சண்டிகரில் காங்கிரஸ் போட்டியிடுவதாகவும், அதேபோல் கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago