18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
முதல்கட்டமாக மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல் 11 ஆம் தேதி) நடைபெற்றது.18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
அசாம் 5,அருணாச்சல பிரதேசம் 2, ஆந்திரா 25, பீகார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்திரபிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என்று மொத்தம் 91 தொகுதிகளில் நடைபெற்றது.
அதேபோல் அருணாச்சலப்பிரதேசம்,ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.இன்று ஒடிசாவில் முதல்கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…