தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று அதாவது நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து விவாதம் நடத்தி, அதன்பின் மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன. ஆனால் விவாதங்கள் நடத்தப்படாமல் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின் குரல் வாக்கெடுப்பு எடுத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் விவாதம் நடத்தப்படாமல் மசோதா நிறைவேறியதை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், ஏற்கனவே 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த பின் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரையிலும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…