தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று அதாவது நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து விவாதம் நடத்தி, அதன்பின் மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன. ஆனால் விவாதங்கள் நடத்தப்படாமல் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின் குரல் வாக்கெடுப்பு எடுத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் விவாதம் நடத்தப்படாமல் மசோதா நிறைவேறியதை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், ஏற்கனவே 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த பின் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரையிலும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…