#Breaking: மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமுடக்கம்!

Default Image

மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. இதன்காரணமாக, அங்கு சில தளர்வுகளை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதன்படி, இன்று அதற்கான அறிவிப்பினை அவர் தெரிவித்தார்.

அதில், மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், திருவிழா தினங்களில் பொதுமுடக்கம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், அந்த தினம் பொதுமுடக்கம் அமலில் இருக்காது எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்