அதிகரிக்கும் கொரோனா.. பீகாரில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Published by
Surya

பீகாரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா பரவலுக்கு ஏற்ப, சில மாநிலங்களில் ஊரடங்கை நீடித்தும் வருகின்றனர்.

அந்தவகையில், பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், நேற்று ஊரடங்கை நீடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தின்போது, பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப். 6-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தெரிவித்தது.

மேலும், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, ரயில் மற்றும் விமான சேவைகள் தொடரும் எனவும், இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago