பெண் தொழில்முனைவோருக்காக ரூ .1,625 கோடி உதவித்தொகை – பிரதமர் மோடி வெளியீடு..!

Published by
Edison

பெண் தொழில்முனைவோருக்கு கடன் உதவிக்தொகையாக ரூ. 1,625 கோடியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று 4 லட்சம் பெண் தொழில்முனைவோருக்கு கடன் உதவிக்தொகையாக ரூ. 1,625 கோடியை வெளியிட்டார். மேலும்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கான (SHGs) கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

பிரதமர் ‘ஆத்மநிர்பர் நாரி சக்தி சே சம்வாத்’ நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றபோது இந்த திட்டத்தை அறிவித்தார்.அதன்பின்னர், தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்துடன் (DAY-NRLM) தொடர்புடைய மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் பிரதமர் உரையாடினார்.

அப்போது பிரதமர் கூறியதாவது:

நோக்கம்:

“தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கமானது,கிராமப்புற ஏழை குடும்பங்களை மகளிர் சுய உதவி குழுக்களாக ஒரு கட்டமாக அணிதிரட்டுவதையும் அவர்களின் வருமானம் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு நீண்ட கால ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்களிடையே தொழில் முனைவோர் நோக்கத்தை அதிகரிக்க, தன்னிறைவு இந்தியாவின் தீர்வில் அதிக பங்கேற்புக்காக ஒரு பெரிய நிதி உதவி வெளியிடப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பெண் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது பிற சுயஉதவிக் குழுக்களாக இருந்தாலும், இதுபோன்ற லட்சக்கணக்கான பெண்களின் குழுக்களுக்கு ரூ.1,600 கோடிக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டிற்கு சேவை:

கொரோனா காலகட்டத்திலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் எங்கள் சகோதரிகள் நாட்டிற்கு சேவை செய்த விதம் பாராட்டுதலுக்குரியது. முகக் கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் தயாரித்தல், தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்குதல், விழிப்புணர்வு பணி போன்ற எல்லா வகையிலும் அவர்களின் பங்கு ஒப்பிடமுடியாது.இந்தியாவில் குறைந்தபட்சம் 420 மில்லியன் ஜன் தன் வங்கிக் கணக்குகள் உள்ளன, அதில் 55% பெண்கள் பெயரில் உள்ளன.

புதிய புரட்சி:

சுய உதவி குழுக்கள் மற்றும் தீன் தயாள் அந்தியோதயா யோஜனா இன்று கிராமப்புற இந்தியாவில் ஒரு புதிய புரட்சியை கொண்டு வருகிறது. இந்த புரட்சியின் ஜோதி மகளிர் சுயஉதவிக் குழுக்களால் நடைபெற்றது.கடந்த 6-7 ஆண்டுகளில், இந்த குழுக்கள் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது மற்றும் சகோதரிகளின் பங்கேற்பு மூன்று முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய பலத்துடன் முன்னேற வேண்டும்:

இன்று, மாறிவரும் இந்தியாவில், நாட்டின் சகோதரிகள் மற்றும் மகள்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.அனைத்து சகோதரிகளும் வீடு, கழிவறை, மின்சாரம், தண்ணீர், எரிவாயு போன்ற வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.மேலும்,சகோதரிகள் மற்றும் மகள்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, தடுப்பூசி மற்றும் பிற தேவைகள் குறித்து அரசாங்கம் முழு உணர்திறனுடன் செயல்படுகிறது.புதிய இலக்குகளை நிர்ணயித்து புதிய ஆற்றலுடன் முன்னேற இது சுதந்திரத்தின் 75 வது ஆண்டுகளின் நேரம். சகோதரிகளின் குழு சக்தியும் இப்போது புதிய பலத்துடன் முன்னேற வேண்டும்.”, என்று அவர் கூறினார்.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நிதியுதவி:

இதனைத் தொடர்ந்து,உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் PMFME (PM ஃபார்மலைசேஷன் ஆஃப் மைக்ரோ ஃபுட் பிராசசிங் எண்டர்பிரைசஸ்) திட்டத்தின் கீழ் 7,500  மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.25 கோடியும் மற்றும் 75 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPO) ரூ.4.13 கோடி நிதியுதவியையும் பிரதமர் வெளியிட்டார்.

Published by
Edison

Recent Posts

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

38 minutes ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

1 hour ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

3 hours ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

3 hours ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

3 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

4 hours ago