டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. பிரதமர் மோடி அமைச்சரவை முதல் முறையாக இன்று விவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார்.
மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வருகிறார்.
அதன்படி,
ராஜஸ்தானை சேர்ந்த மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்சந்திர பிரசாந்த் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
மத்திய அமைச்சராக அஜய்குமார் பதவியேற்றார்.
மத்திய அமைச்சராக தேவுசிங் செளகான் பதவியேற்றார்.
திரிபுரா பெண் எம்.பி. பிரதிமா பொய்மிக் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
டாக்டர் சுபாஷ் சர்கார் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
பிஸ்வேஸ்வர் டுடு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
ஜான் பார்லா மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…