#LIVE : மக்களின் சிரமத்தை உணர்கிறேன் – பிரதமர் மோடியின் உரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனிடையே ஒடிஷா, பஞ்சாப் மஹாராஷ்டிரா, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

  • கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்.
  • ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது.
  • தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம்.
  • கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர்.
  • நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.
  • உரிய நேரத்தில், உரிய முடிவுகள் எடுக்காமல் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக ஏற்பட்டிருக்கும்.
  • உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மோடி அறிவிப்பு.
  • 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு.
  • கொரோனா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது.
  • ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும்.
  • ஏழை மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் நடைமுறைக்கு வரும்.
  • முக கவசங்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்.
  • Aarogya Setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
  • ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
  • வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம்.
  • ஊழியர்கள் யாரையும் நிறுவனங்கள் நீக்க வேண்டாம்.
  • கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கவனத்துடன் கையாள வேண்டும்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…

19 minutes ago

பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…

59 minutes ago

Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…

1 hour ago

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…

2 hours ago

வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,

சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…

2 hours ago

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…

3 hours ago