வீட்டு குழாயில் மதுபானம் சப்ளை.! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்.! நடந்தது என்ன.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • கேரளாவில் உள்ள மதுபான கடையில் கைப்பற்றப்பட்ட மதுபானங்களை காவல்துறை ஓர் இடத்தில் குழி தோண்டி மொத்த மதுபானங்களையும் கொட்டி இருக்கிறார்கள்.
  • அங்குள்ள வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக வீட்டுக் குழாயைத் திறக்கும் போது மதுபானம் வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசிடம் புகார் அளித்துள்ளார்கள்.

கேரளாவில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான கடையில் பதுக்கப்பட்ட  மதுபானங்களை கைப்பற்றி அப்புறப்படுத்த காவல்துறை முடிவு செய்திருக்கிறார்கள். இது சுமார் 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் ஆகியவற்றை அப்புறப்படுத்த முடிவு செய்த அவர்கள் அதே பகுதியில் உள்ள ஓர் இடத்தில் குழி தோண்டி மொத்த மதுபானங்களையும் கொட்டி இருக்கிறார்கள். இது அங்கு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்லைனில் கலந்திருக்கிறது. பின்னர் அங்குள்ள வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக வீட்டுக் குழாயைத் திறக்கும் போது மதுபானம் வந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து அங்குள்ள சாலமன் குடியிருப்பில் வசிக்கும் ஜோஷி, என்பவரின் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு சமையலறையில் உள்ள தண்ணீர் குழாயைத் திறக்கும் போது, பழுப்பு நிறத்தில் தண்ணீர் வந்தது. இதை நுகர்ந்து பார்த்தால் மதுபான வாசனை அடித்தது, என தகவல் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கோ, பெற்றோர்கள் வேலைக்கோ, அன்று செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்திருக்கிறார்கள். தமது தவறை உணர்ந்த காவல்துறையினர் அந்த பகுதி குடியிருப்புவாசிகளுக்குத் தற்காலிகமாகக் குடிநீர் வழங்கி இருக்கிறார்கள்.

இதற்கு மத்தியில் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்கும் கிணறும் இதன் காரணமாக மாசடைந்திருக்கிறது. இது தொடர்பாக விளக்கம் பெற காவல் துறையைத் தொடர்பு கொண்டோம் ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தனர். பின்னர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இப்படி கைப்பற்றப்படும் மதுபான பாட்டில்களை எரித்துவிடுவோம். ஆனால் மாசு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்று குழி வெட்டி புதைத்திருக்கிறார்கள் என்று கூறினார். இது குறித்து முறைப்படி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

18 minutes ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

43 minutes ago

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

2 hours ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

2 hours ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

3 hours ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

4 hours ago