இன்று முதல் புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு அனுமதி!

Default Image
  • புதுச்சேரியில் ஜூன் 14-ஆம் தேதி வரை தளவுரவுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இன்று முதல் மதுபான கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 7-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மீண்டும் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று உத்தரவு வெளியிடப்பட்டது.

இந்த ஊரடங்கின் தளர்வுகளாக காலை 5 மணி முதல் பிற்பகல் 12 வரை அனைத்து காய்கறிகள், பால், மருந்து பொருட்கள், அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் மாலை 5 மணி வரை இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை ஊரடங்கின் பொழுது மதுபான கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது  மதுபான கடைகள் இயங்குவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்களில் அமர்ந்து மது அருந்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்